பாப்பிரெட்டிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் அதிரடி கைது

பாப்பிரெட்டிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் அதிரடி கைது

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அண்ணாநகரைச் சேர்ந்த நசுரூதின்,19.அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story