Begin typing your search above and press return to search.
தர்மபுரி அருகே சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
தர்மபுரி அருகே சைக்கிள் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி அருகே சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு.
தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரம் மோட்டு பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது (எ) மாதையன் வயது 51.இவர் நேற்று இரவு தனது சைக்கிளில் மோட்டு பட்டியிலிருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.