/* */

தர்மபுரி அருகே தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது

தர்மபுரி மாவட்டத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது
X

தர்மபுரி மாவட்டம் மதி கோன்பாளையம் எம். ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). விவசாயி இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வசித்து வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்த மகன் பிரகாஷ் (35) பற்றி தந்தை பெருமாள் கேட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த பெருமாளை சிகிச்சைக்கு செல்ல விடாமல் பிரகாஷ் தடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் அவசர அவசரமாக பெருமாள் சடலத்தை அடக்கசெய்ய முயன்றுள்ளார். தகவலறிந்த வி.ஏ.ஓ. மதிகோன்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், பிரகாஷ் தாக்கியதில் பெருமாள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதிகோன்பாளையம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 March 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்