/* */

பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

தொலைபேசிக்கு எந்த விதமான குறுஞ்செய்திகளும் வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன நிலையில் பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
X

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உதவித்தொகையை பெற ஏராளமான குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அரசு அதில் 1.6 கோடி நபர்களுக்கு தற்போது தொகையை ஒவ்வொரு கட்டமாக வழங்கி வருகிறது.

தொகைக்கு விண்ணப்பித்த பெரும்பா லான குடும்பத் தலைவிகளுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் கிடைக்கப்பெறவில்லை எனவும், விண்ணப்பத்தின் நிலை குறித்து தொலைபேசிக்கு எந்த விதமான குறுஞ்செ ய்திகளும் வருவதில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் தகுதியுடைய நபர்கள் விடுபட்டிருந்தால், இ-சேவை மூலமாக வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலையை அறிந்து மேல் முறையீடு செய்து பயன் பெறலாம். என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பத்தின் நிலையை அறியவும் , விண்ணப்ப த்திற்கு மேல்முறையீடு செய்யவும், தகுதி இருக்கும் தங்களுக்கு பணமும் வரவில்லை , அதற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை என கூறி இன்று பாப்பிரெட்டிப் பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், காலை முதலே குடும்பத் தலைவிகளின் கூட்டம் அலைமோதியது.

இதனை அறிந்த அரூர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொது மக்களிடத்தில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என கூறினார். மேலும் தகுதியான விண்ணப்பங்களை கவனத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய விண்ணப்பங்களை தகுதியான ஆவணங்களுடன் இணைத்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த திடீர் ஆய்வு காரணமாக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Sep 2023 3:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!