பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி

பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி
X

 நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்த்துறை தலைவர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ், தன்னார்வலர்கள் மணியரசன், விக்னேஷ், கலந்து கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி ,ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture