/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
X

பைல் படம்.

பொம்மிடி அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யா (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு மகேந்திரவர்மன் ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ராஜ்குமார் ஊருக்கு வந்தார். அன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று மாலை குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பொம்மிடி போலீசுக்கும், தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மணி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இருந்து திவ்யா மற்றும் குழந்தையை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் தாய், குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரூர் உதவி கலெக்டர் முத்தையா விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப தகராறில் குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 20 Feb 2022 5:00 AM GMT

Related News