பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு!

பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு!
X

பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ கோவிந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், எம்.எல்.ஏ கோவிந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள் தோறும் உயர்ந்து வருகிறது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் பெரும்பாலும் எப்போதும் நிறைந்து காணப்படுகிறது. புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி தீவிரசிகிச்சைக்கு வருபவர்கள், தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, இன்று பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரடியாக சென்று மருத்துவ வசதிகள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து, அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டதை, எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அவருடன் மருத்துவ அலுவலர் அருண், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், சுகாதார ஆய்வாளர் நவநீதிகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future