பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மாபெரும் வடிகால் தூய்மை பணி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் நெடுஞ்சாலை பணியாளர்கள்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் கோட்ட பொறியாளர் தனசேகரன் உத்தரவின்படி, உதவி கோட்ட பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் நேதாஜி அவர்கள் மேற்பார்வையில் ரோடு இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ராஜாஜி, மாரியப்பன் மற்றும் சாலைப் பணியாளர்கள், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோரம் உள்ள கால்வாய் பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள மண்மேடுகள், குப்பைகள், ஆகியவற்றை தூர்வாரி சீர் செய்தனர்.
எதிர்வரும் மழைக்காலங்களில் மழைநீர் ரோடுகளில் தேங்கி ரோடுகள் சேதம் அடைவதை தடுக்கும் வகையில் இந்த மாபெரும் வடிகால் தூய்மை பணி நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu