/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஒருவர் கைது: 2 பேர் தலைமறைவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஒருவர் கைது :2 பேர் தலைமறைவு

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஒருவர் கைது: 2 பேர் தலைமறைவு
X

பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தோளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் இவரது மகன்கள் சேட்டு,வயது 50, செந்தில்,வயது.44. இவர்கள் இருவருக்கும் விவசாய பொது கிணறு உள்ளது. இதில் இருவரும் விவசாயத்துக்கு தண்ணீர் இறைத்து வந்தனர். இந்த நிலையில் விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சேட்டு தனியாக மோட்டார் பொருத்தி தண்ணீர் இறைக்க முயற்சி செய்துள்ளார். இதனை தம்பி செந்தில் கேட்டதன் பேரில் இருவருக்கும் இடையே கடந்த 3ந்தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் காயம்பட்ட சேட்டு அவரின் மனைவி உஷாராணி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், வயது 44.யை ஏ.பள்ளிபட்டி போலீசார் கைது செய்தனர். இவரது மனைவி சீதா ,வயது. 35. மகன் சிபிராஜ், வயது.22. ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Updated On: 7 Aug 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது