/* */

வத்தல்மலை சாலையில் 10 இடங்களில் மண் சரிவு: போக்குவரத்துக்கு தடை

தொடர் மழை காரணமாக வத்தல்மலை செல்லும் சாலையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வத்தல்மலை சாலையில் 10 இடங்களில் மண் சரிவு: போக்குவரத்துக்கு தடை
X

தொடர் மழை காரணமாக வத்தல்மலை செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு.

தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து 3700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் பெரியூர்,ஒன்றிக்காடு, சின்னங்காடு, பால் சிலம்பு,நாயக்கனூர், மன்னாங்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இயற்கையான குளிர்ந்த சூழ்நிலையில் மலைகள் நிறைந்த இந்த கிராமங்களில் காப்பி, கமலா, ஆரஞ்சு, பலா உள்ளிட்ட மழை பயிர்கள் பயிரிடப்படுகிறது. வருடத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கு நல்ல மழை பெய்வதுடன் குளிர்ந்த காற்று வீசுகிறது. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ள மலைப்பாதை இயற்கையான சூழ்நிலையில் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென்று தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு வத்தல்மலையை சுற்றுலா தளமாக அறிவித்து அங்கு சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. தோட்டக்கலை துறை பூங்கா, படகு இல்லம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வத்தல்மலைக்கு ரூ.10 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வத்தலமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான இடங்களில் பாறைகள் சரிந்து சாலையில் கிடக்கிறது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டு மலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். தற்போதும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவால் சுற்றுலா பயணிகள் யாரும் வத்தல்மலைக்கு செல்ல முன்வரவில்லை. இதேபோன்று தொடர் மழை காரணமாக புதிதாக போடப்பட்ட தார் சாலை ஆங்காங்கே பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக மலைப் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் தடுமாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வத்தல் மலைக்கு நீண்டகாலமாக சாலை வசதி கேட்டு போராடி புதிய தார்சாலை கிடைத்தது. இந்த தார் சாலை தரமானதாக போடப்படாததால் ஆங்காங்கே பழுதடைந்துள்ளது. தொடர்ந்து வாகனங்கள் சென்று வந்தால் இருக்கிற சாலையும் மேலும் மோசமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதே போன்று சாலை அமைக்கும் முன்பே எந்தெந்த இடத்தில் மண் சரிவு ஏற்படும் என்று திட்டமிடாமல் சாலை அமைத்து விட்டனர்.

இதனால் தற்போது பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தரமில்லாமல் போடப்பட்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வத்தல் மலைக்கு செல்லும் மலைப்பாதையில் இனிவரும் காலங்களில் மண்சரிவு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொண்டை ஊசி வளைவுகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என்று கூறினர்.

Updated On: 14 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?