/* */

வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி

சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த ரேகடஅள்ளி கிராமத்தை சேர்ந்த கருணாநிதியின் மகன் காந்தி (34). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரிடம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நன்னடத்தை அலுவலர் வேலை வாங்கி தருவதாக சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை. இதில் ஏமாற்றமடைந்த காந்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட குற்றபிரிவு போலீசார் கவிதா ராமதாஸ், அவரது கணவர் வினோத் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  2. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  3. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  4. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  5. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  7. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  8. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  9. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  10. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...