/* */

சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை எச்சரித்த வனத்துறையினர்

பொம்மிடி அருகே, சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை வனத்துறையினர் தடுத்து எச்சரித்து அனுப்பினர்.

HIGHLIGHTS

சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை எச்சரித்த வனத்துறையினர்
X

வனப்பகுதிக்குள் உள்ள சிற்றருவியில் குளிக்க சென்ற இளைஞர்களை, தடுத்து எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையில் சேர்வராயன் வடக்கு வனச்சரகம் பொம்மிடி பிரிவு பகுதியில் ஏற்காடு அடிவாரத்தில் ஆனைமடுவு உள்ளது. இங்கு மழைக்காலங்களில் பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. வனப்பகுதியில் உள்ள இந்த அருவிகளை ரசிக்கவும், ஆற்றில் குளிக்கவும் சிலர் வந்து செல்கின்றனர்.

மது அருந்தும் நோக்கத்துடனான குழுவினர் சிலர் இப்பகுதிக்குள் நுழைந்து வனம் மற்றும் வன விலங்குகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே, அப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் செல்பவர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்து, வனப்பகுதியில் நுழைவாயில் மற்றும் வனத்தில் ஆங்காங்கே அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பக்ரீத் பண்டிகையையோட்டி அரசு விடுமுறை தினம் என்பதால், சுற்று வட்டாரங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தடையை மீறி, வனப்பகுதிக்குள் வந்திருந்தனர். ஆனால் தடையை மீறி வனப்பகுதிக்குள் வந்தவர்களை வனத் துறையினர், தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து குளிக்க வந்தவர்களிடம் வனத்துறை பணியாளர்கள், ஆனைமடுவு பகுதியும் அதையொட்டிய வனப்பகுதியும் சுற்றுலா தலமாக பயன்படுத்த அரசால் அனுமதி அளிக்கப்படாத பகுதிகள். இங்கு காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. சுற்றுலா நோக்கத்துடன் வருவோர் மற்றும் மது அருந்தும் நோக்கத்துடன் வருவோரைக் கண்டால், இந்த வன விலங்குகள் மிரட்சி அடைகின்றன.

மேலும், காட்டாற்று அருவிகளின் பெரிய பாறைகளில் யாரேனும் வழுக்கி விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ஆனைமடுவு பகுதிக்குள் அவசியமற்ற யாரையும் அனுமதிக்க முடியாது. அத்துமீறி யாரேனும் நுழைந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 21 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!