/* */

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் டெங்கு,கொரோனோ தடுப்பு ஆய்வு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதிகளில், டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் டெங்கு,கொரோனோ தடுப்பு ஆய்வு கூட்டம்
X

கடத்தூரில் டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எதிர்வரும் 14 ந்தேதி நடைபெறும் கொரோனோ தடுப்பூசி முகாமையொட்டியும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊராட்சி செயலர்களுக்கு ஆய்வு கூட்டம், ஒன்றிய ஆணையாளர் அருள்மொழி தேவன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாவதால், கிராமங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தொட்டிகளையும், குளோரின் போட்டு சுத்தப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும். கிராமப்பகுதிகளில், குழிகள், மட்டை, பிளாஸ்டிக், டயர் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நாள்தோறும் தண்ணீர் விடும் போது குளோரின் போட்டுதான் விட வேண்டும். வரும் 14,ந்தேதி கொரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வைக்க வேண்டும். திட்டபணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வு கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், பணி மேற்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல அலுவலர் முரளிகண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு