அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானூரில் நடைபெற்று வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிட பணியை ஆய்வு செய்த சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூனையானூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.19 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் கவிதா, கோபாலபுரம் கூட்டுறவு சக்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேகர், மதிவாணன், என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், நகர செயலாளர் சந்தோஷ், ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu