பாலக்கோடு அருகே லாரிகள் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

பாலக்கோடு அருகே லாரிகள் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்
X

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை நான்கு ரோட்டில் மோதிக்கொண்ட லாரிகள் .

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை நான்கு ரோட்டில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதில் டிரைவர் படுகாயம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை நான்கு ரோட்டில் மாரண்டஹள்ளியிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வரும் போது பாலகோட்டில் இருந்து எம்- சேண்ட் ஏற்றி சென்ற லாரி நொடிப்பொழுதில் சாலையை கடக்க முயன்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது .

இந்த விபத்தால் லாரி டிரைவர் சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற அக்பர்(40) படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags

Next Story
ai solutions for small business