/* */

பாலகோட்டில் மழைக்கு இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு

பாலக்கோடு அடுத்த கரகதஹள்ளியில், 20 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு மழைக்கு இடிந்து விழுந்தது.

HIGHLIGHTS

பாலகோட்டில் மழைக்கு இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு
X

பாலகோட்டில் மழைக்கு இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கரகதஹள்ளி கிராமத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக, 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 100 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட குளிர்பதன கிடங்கின் கட்டட பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று, கரகதஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், குளிர்பதன கிடங்கிற்கு கட்டப்பட்டிருந்த, 15 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது. மழையால் கட்டுமான பணியாளர்கள் வேறு இடத்தில் ஒதுங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, குளிர்பதன கிடங்கு பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...