/* */

பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா : சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

HIGHLIGHTS

பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா : சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
X

பாலக்கோடு காட்டம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா அலங்காரம் 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஊர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களான அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

கொரோனா பரவல் தடுப்பாக கிராம மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், என மேளதாளம் முழங்க பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

பெண்கள் மாவிளக்கு தட்டு மற்றும் பூஜை பொருட்கள் என பக்தர்கள் ஸ்ரீஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ காளியம்மன் கோவில் வரை நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர் மேலும் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்,கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இந்தவிழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 11 Aug 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்