/* */

பாலக்கோடு அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர் தற்கொலை

பாலக்கோடு அடுத்த பொம்மனூர் கிராமத்தில், ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர், முடிவில் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர் தற்கொலை
X

கோகுல்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி. இவரது மகன் கோகுல் (வயது.21) டிப்ளமோ படித்து முடித்து ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது, வீட்டுக்கு வந்த கோகுல் செல்போனில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதற்கு அடிமையானார்.

இந்த விளையாட்டுக்காக, பெற்றோர்க்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் சேமிப்பு பணத்தை வைத்து விளையாடி, அவற்றை இழந்தார். மேலும் கடனும் அதிகரித்ததால், சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். அப்போது, பெற்றோரிடம் தான் எலி மருந்து சாப்பிட்டதாக கூறியதையடுத்து வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கோகுல், நேற்று அங்கு சிகிச்சை பலனியின்றி உயிரிழந்தார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Updated On: 4 Jan 2022 11:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?