Begin typing your search above and press return to search.
பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை பறிமுதல் செய்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் பெங்களூரிவிலிருந்து தருமபுரி வழியாக கோவைக்கு சென்ற சொகுசு காரை ரோந்து பணியில் இருந்த போலிசார் நிறுத்தி கார் டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.
விசாரணை நடத்தியதில் பெங்களூரில் இருந்து கோவை சென்று கொண்டு இருப்பதாக தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் காரை சோதனை செய்ததில் காரில் கடத்தி செல்ல முயன்ற சுமார் 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யபட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இக்கடத்தலில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த விக்ரம் சிங்(24) கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய காரை காரிமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.