/* */

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான மாரியம்மன் திருவிழா

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான ஸ்ரீ மாரியம்மன் திருவிழா .

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான  மாரியம்மன் திருவிழா
X

பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞான ஸ்ரீ மாரியம்மன் திருவிழா .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தில் ஞானஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சீரண்டபுரம் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கொண்டாடி வருகின்றனர்.

இத்திருவிழாவானது கடந்த 29ம் தேதி ஏரிக் கோடி முனியப்பன் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


Updated On: 2 Jun 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு