காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி சாவு

காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி சாவு
X

பைல் படம்.

காரிமங்கலம் அருகே பைக்கில் சென்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த போலத்தம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் 50 விவசாயி. இவர் தனது பைக்கில் திப்பம்பட்டிலிருந்து காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தனியார் ஜூஸ் பேக்டரி அருகே சென்றபோது சாலையில் இருந்த வேகத்தடை மீது பைக் ஏறியபோது பைக்கிலிருந்து வடிவேல் தவறி விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் வடிவேல் மீது மோதி விட்டு சென்றுவிட்டது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture