/* */

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தில் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
X

பாலக்கோடு அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பால் நிறுவன ஊழியர்கள்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி கிராமத்தில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தற்காலிகமாகவும், நிரந்தமாகவும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலனாவர்கள் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளி சந்தை ஆகிய உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன்பு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தருமபுரி டிஸ்ட்ரிக் மில்க் யூனியன் என்ற சங்கத்தை தொடங்கி, அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் சங்கம் தொடங்கி, நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுப்பதாக நிர்வாகம் சங்க பிரதிநிதிகளை பழிவாங்கி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு கட்டமாக ஊழியர்களுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி திடீர் திடீரென பெங்களுர், தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு பணி மாறுவதல் வழங்கி வருவதாக சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று காலை பணிக்கு சென்ற ஊழியர்கள் 10 பேரை தீடீர் என மகாராஷ்டிரா, மும்பை, தெலங்கானா மாநிலத்திற்க்கு பணி மாறுதல் செய்ததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், பழிவாங்கும் போக்கை கைவிட வலியுறுத்தி, நிறுவனத்தின் முன்பு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காலை தனியார் பால் நிறுவன ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 22 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்