/* */

பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

பாலக்கோடு அருகே மொரப்பூர் காட்டுப்பகுதியில், யானை தாக்கியதில், விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
X

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மொரப்பூர் காட்டுப்பகுதி, கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர், தாசப்பன் மகன் முனுசாமி என்கிற எலப்பையன்(68). இவா், காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, காட்டு யானை தாக்கியதாக தெரிகிறது. இதில், அவரது உடல் பாகங்கள் நசுங்கி சேதமடைந்து, உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காட்டுப்பகுதியில் முனுசாமி உயிரிழந்து கிடந்ததை பார்த்த சிலா், வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மாரண்டஅள்ளி காவல்துறைக்கு தகவல் அளித்து சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனுசாமி, யானை தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு எதாவது காரணமா என விசாரனை செய்து வருகின்றனர்.

Updated On: 14 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்