/* */

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு தருமபுரி கலெக்டர் அஞ்சலி

காஷ்மீரில் உயிரிழந்த தருமபுரி மாவட்ட ராணுவ வீரரின் உடலுக்கு, கலெக்டர் திவ்யதர்சினி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு தருமபுரி கலெக்டர் அஞ்சலி
X

காஷ்மீரில் உயிரிழந்த, தருமபுரி கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் எஸ்.பூபதியின் உடலுக்கு, ஆட்சியர் திவ்யதர்சினி அஞ்சலி செலுத்தினார். 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.பூபதி, 27, இவர் இந்திய ராணுவ வீரர் ஆவார் இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 4ம் தேதி அன்று ராணுவ வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் ராணுவ வீரர் பூபதி மரணமடைந்தார்.

உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கம்மாளப்பட்டி கிராமத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் ராணுவ வீரரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ வீரரின் உடல் உரிய மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 Jun 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  2. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  4. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  7. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  8. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்