/* */

மாரண்டஅள்ளியில் கொரோனா தடுப்புப்பணி - கே.பி.அன்பழகன் ஆலோசனை

பாலக்கோடு தொகுதிகுட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மாரண்டஅள்ளியில் கொரோனா தடுப்புப்பணி - கே.பி.அன்பழகன் ஆலோசனை
X

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. நகரங்களை விட கிராமங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கே.பி.அன்பழகன் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு மருந்துகள் கையிருப்பு உள்ளதான என ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று பாலக்கோடு தொகுதிகுட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கே.பி. அன்பழகன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துறைத்தார். இந்த ஆலோசனையில் பாலக்கோடு ஒன்றியக் குழுத்தலைவர் சி.பாஞ்சாலை கோபால், அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...