/* */

தர்மபுரி அருகே கிணற்றில் கவிழ்ந்த கார்: மீட்புப்பணியில் தீயணைப்புப்படையினர்

தர்மபுரி அருகே 4 பேருடன் சென்ற கார் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுது. மீட்புப்பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே கிணற்றில் கவிழ்ந்த கார்: மீட்புப்பணியில் தீயணைப்புப்படையினர்
X
கிணற்றில் விழுந்தவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

தர்மபுரி அருகே காரிமங்கலம் அடுத்த பொன்னேரியில், மேட்டூரிலிருந்து பெங்களூரு நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தர்மபுரி அடுத்த பெரியாம்பட்டி அருகில் செல்லும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காார் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள விவசாய கிணற்றில் தலைகுப்புற விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அந்த காரில் இருந்த குடும்பத்தலைவி உமா என்பவரை மட்டும் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக மீட்டனர்.

அவருடைய கணவர், குழந்தைகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக தர்மபுரி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 16 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது