சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பைல் படம்

சிறுமியை கடத்திய வாலிரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமி +2 படித்து வருகிறார். இவர் தர்மபுரியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார்.

நேற்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதில் மாரண்டஅள்ளி காந்தி நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் துரை என்பவர் திருமண ஆசைகாட்டி தனது மகளை கடத்திச் சென்றுவிட்டார் என தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் சிறுமியுடன் துரை பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story