Begin typing your search above and press return to search.
பாலக்கோடு அருகே பஸ் மோதி பெண் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஸ் மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்தனஹள்ளியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பச்சியம்மாள்,60.கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணிக்கு, தனது வீட்டில் இருந்து மொட்டையன்கொட்டாயில் நடைபெறும் தெருக்கூத்தை காண்பதற்கு, பாலக்கோடு காவேரிப்பட்டினம் ரோட்டில் சிக்கார்த்தனஹள்ளி மொட்டையின் கொட்டாய் பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரிமங்கலத்தில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த அரசு பேருந்து, அதிவேகமாக வந்து பச்சையம்மாள் மீது மோதியது. இதில் பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து ரங்கசாமியின் மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.