மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
X

விபத்துக்குள்ளான டிராக்டர். 

பாலக்கோடு அருகே, மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி எம்.செட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் விவசாயி பெரியசாமி(35). இவருக்கு சொந்தமாக கெண்டேனஹள்ளி கிராமத்தில், 2ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை தன்னுடைய டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மண் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து உள்ளது. இதில், எதிர்பாராதவிதமாக பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், விரைந்து சென்று விவசாயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?