/* */

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

பாலக்கோடு அருகே, மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
X

விபத்துக்குள்ளான டிராக்டர். 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி எம்.செட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் விவசாயி பெரியசாமி(35). இவருக்கு சொந்தமாக கெண்டேனஹள்ளி கிராமத்தில், 2ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை தன்னுடைய டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மண் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து உள்ளது. இதில், எதிர்பாராதவிதமாக பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், விரைந்து சென்று விவசாயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி