Begin typing your search above and press return to search.
தருமபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை:
தருமபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில் வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலமாக மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் நல்லம்பள்ளி அருகே உள்ள லலிகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.
கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பரவலமாக மழை பெய்தது. இந்த வெயிலுக்கு இடையில் கோடை மழை பெய்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.