Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்
தர்மபுரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் ச.திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் ச.திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்கள் அனைத்தும் வரும் 30ம் தேதி இரவு 10.00 மணி முதல் மே 2ம் தேதி காலை 12.00 மணி வரை மூடிவைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.