/* */

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு
X

பைல் படம்.

அரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பாட்டி, பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் மனைவி குமார்த்தி (37). இந்த தம்பதியின் மகன் சந்தேஷ் (22). அரூரை அடுத்த செல்லம்பட்டி புதூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு குமார்த்தி, அவரது மகன் சந்தோஷ், மாமியார் சின்னம்மாள் ஆகிய மூவரும் சென்றுள்ளனர். கோயில் விழா முடிந்த பிறகு, தமது வீட்டிற்கு செல்வதற்காக மூவரும் இருசக்கர வண்டியில் அரூர்}சிந்தல்பாடி சாலையில் சென்றுள்ளனர். இருசக்கர வண்டியை இளைஞர் சந்தோஷ் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது செல்லும் வழியில் அள்ளாளப்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர் சந்தோஷ் (22), அவரது பாட்டி சின்னம்மாள் (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மற்றொரு இருசக்கர வண்டியை ஓட்டி வந்த பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தீத்து மகன் விஜய் (25), சக்திவேல் மனைவி குமார்த்தி (37) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Updated On: 26 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!