/* */

பழங்குடியின மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோவில் வழக்கு

அரூர் அருகே பழங்குடி இன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பழங்குடியின மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோவில் வழக்கு
X

தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். அவரது வீட்டிற்கு உறவினரான கல்லூரி மாணவர் சூர்யா, 20, என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி ஆறு மாத கர்ப்பமானார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டபோது உனக்கு, 18 வயது முடியவில்லை. இருவருக்கும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என, சூர்யா கூறியுள்ளார். கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கருதிய சிறுமி, கடந்த 18ந்தேதி காலை, 9மணிக்கு வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார். அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...