/* */

தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி

அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் மூலம் ரூ.10.67 இலட்சம் காணிக்கை பெறப்பட்டது

HIGHLIGHTS

தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி
X

அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் நடைபெற்ற  உண்டியல் எண்ணும் பணி

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் மலை மீது உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களிலிருந்து குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் தீர்த்த நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான ஈஸ்வரன், வடிவாம்பிகை கோவில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக இரண்டு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு, உண்டியல் எண்ணப்பட்டது. இந்த பணியில் அறநிலைய துறை அலுவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் என 20 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரண்டு உண்டியலிலும் சேர்த்து ரூ.10,67,581 பணம் இருந்தது. ஆனால் வழக்கமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை எண்ணும் போது ரூ.12 இலட்சம் இருக்கும். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆறு மாதம் கழித்து உண்டியல் எண்ணப்பட்டதில், 50 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 July 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது