மொரப்பூர் அருகே அங்கன்வாடி மையங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சீர் வரிசை

மொரப்பூர் அருகே அங்கன்வாடி மையங்களுக்கு  தொண்டு நிறுவனங்கள் சீர் வரிசை
X

தர்மபுரி மாவட்டம் மொரப்பூா் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு  கடத்தூர் ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவன தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைப்பெற்ற சீா் வாிசை வழங்கப்பட்டது.

அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் சீராக வழங்கப்பட்டது

மொரப்பூர் அருகே அங்கன்வாடி மையங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில் சீர் வரிசை வழங்கப்பட்டது.

இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பு மற்றும் கடத்தூா் ஆர்.டி.எஸ்.தொன்டு நிறுவனுமும் இனைந்து அங்கன்வாடி தினம் ஐந்து மையங்களிலும் அங்கன்வாடி சீா் வாிசை வழங்கியது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூா் ஒன்றியத்தில் போளையம்பள்ளி, கடத்தூா் ஒன்றியத்தில் மணியம்பாடி ஆகிய இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கு சீா் வாிசை வழங்கும் விழா, கடத்தூர் ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவன தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை சீர் வரிசைகளாக வழங்கி பேசினார்.

இதில், ஊராட்சி மன்ற தலைவா்கள் மஞ்சுளா , கலைமணி, ஊராட்சி செயலா் பிருந்தா மற்றும் ஆா்,டி,எஸ்,தொன்டுநிறுவன பணியாளா்கள் லட்சுமி, சா்மிளா,சங்கீதா, சென்னம்மாள், நூற்றுக்கும் மேற்பட்ட ஊா் பொது மக்கள் திரளாக கலந்துக்கொன்டனா்.




Tags

Next Story
why is ai important to the future