/* */

ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

ஜே.சி.பி., கிரேன், டிராக்டர், கம்பரசர் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களில், ஆண்டு வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்.

HIGHLIGHTS

ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு  அபராதம் விதிப்பு
X

தர்மபுரி மாவட்டம் அரூரில் ஆண்டு வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

ஜே.சி.பி., கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அபராதமின்றி ஆண்டு வரி செலுத்த, கடைசி நாளாக ஏப்ரல் 10-ம் தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட வாகனங்கள் விதி மீறி வரி வரிசெலுத்தாமல் இயக்குப்படுவதாக தெரியவந்ததை அடுத்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 சிவக்குமார் ஆகியோர் அரூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டதில், வரி செலுத்தாமல் விதி மீறி இயக்கிய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளரிடம் வரி ரூ.2,72,900/- மற்றும் இணக்கக் கட்டணம் ரூ.12,200/ வசூலிக்கப்பட்ட பின் வாகனம் விடுவிக்கப்பட்டது.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜே.சி.பி. கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் வாகன உரிமையாளர்கள், உரிய நிலுவை வரியினை உடனடியாக செலுத்தமாறும், மீறும்பட்சத்தில் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Aug 2021 4:45 PM GMT

Related News