/* */

மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது

அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாணவியை  கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி வேலனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவரை கடந்த 2020 நவம்பர் மாதம் பொபசுமரத்துவளவு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் அயப்பன் (வயது 27) என்பவர் கடத்திச் சென்றார்.

மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாணவி வீடு திரும்பினார். மாணவியை கடத்திய அயப்பன் ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.

நேற்று கோட்டப்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது, ஐயப்பன் அவரது கிராமத்திற்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 8 Sep 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி