/* */

அரூர் அருகே இன்று வளைகாப்புக்கு காத்திருந்த கர்ப்பிணி மர்ம உயிரிழப்பு

அரூர் அருகே இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

அரூர் அருகே இன்று வளைகாப்புக்கு காத்திருந்த கர்ப்பிணி மர்ம உயிரிழப்பு
X

மர்மமான முறையில் உயிரிழந்த கர்ப்பிணி சோனியா.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சார்ந்த பிரதீப் என்பவருடைய மனைவி சோனியா. இவர்களுக்கு கடந்த 11 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் பிரதீப் கோவையில் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி சோனியா 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைக்கண்ட சோனியா அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில், நேற்று மர்மமான முறையில் இவருடைய கணவரின் வீட்டில் தூக்கிலிட்டபடி இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவயிடத்திற்க்கு வந்த அரூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இறப்பில் மர்மம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் கொலையா தற்கொலையா என அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிறைமாத கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் தூக்கிட்டபடி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...