/* */

அரூர் அருகே வாரச் சந்தையில் கால்நடை அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

அரூர் அருகே வாரச் சந்தையில் பொஙகலையொட்டி கால்நடைகளுக்கா வண்ண வண்ண கயிறு, மணிகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

அரூர் அருகே வாரச் சந்தையில் கால்நடை அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
X

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற வார சந்தை.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு வார சந்தையில் கால்நடைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இதில் பசு மாடுகளை அலங்கரிக்க தேவையான கயிறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், வார சந்தைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை குறைந்தது.

தற்போது பொங்கல் நெருங்கும் நிலையில் இன்றைய வாரச்சந்தையில் கால்நடைகள் வாங்க, விற்க விவசாயிகள் வருகை அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க கண்களை கவரும் வகையில், புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாயபட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருட்களை வார சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் பொங்கலுக்கு இரண்டே நாட்கள் இருப்பதால், அலங்கார பொருட்களை விவசாயிகள் வாங்கிச் சென்றனர். இதனால் அலங்கார பொருட்களின் விலை உயர்ந்தும் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 12 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்