/* */

அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

அரூர் பகுதியில் எட்டு வழி சாலை போராட்ட காரர்கள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் என அரசு அறிவிப்பு க்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்

தமிழகத்தில் சென்னை முதல் சேலம் வரை சுமார் பத்தாயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசும், கடந்த கால அதிமுக அரசு குறியாக இருந்தனர்.

ஆனால் ஐந்து மாவட்ட விவசாயிகளும் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி, திட்டத்திற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து, நிலம் தர மாட்டோம் என அகிம்சை வழியில் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் விவசாயிகளின் மீது அன்றைய அதிமுக அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக தலைமையில் புதிய ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. இந்த ஆட்சி அமைத்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டு வழி சாலையை அமைய விடமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தார். தொடர்ந்து இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எட்டு வழிசாலைக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது பதியப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஒன்றிணைந்து, அரூர் அடுத்த லிங்காபுரத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அதேபோல் எட்டு வழி சாலை அமைக்க துடித்த மத்திய பாஜக அரசும், முன்னாள் அதிமுக அரசும் விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை நடத்தியது. ஆனால் தற்பொழுது பதவியேற்றுள்ள திமுக அரசு விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறப் படும் எனவும், இந்த எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை அமைக்க விடமாட்டோம் என அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவசாயிகள் கடவுளாக வணங்கி மகிழ்வோம் என எட்டு வழிசாலை எதிர்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...