/* */

விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்த விவசாயி

மொரப்பூர் வனவர் சிவக்குமார் தலைமையில் விவசாயி நாகேந்திரனிடம் இருந்த மலைப்பாம்பை மீட்டு காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

HIGHLIGHTS

விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்த விவசாயி
X

பிடிபட்ட மலைப்பாம்புடன் விவசாயி குடும்பத்தினர்.  

தர்மபுரி மாவட்டம்,காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கொரங்கேரி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் விவசாயி. நேற்று மதியம் தனது விவசாய தோட்டத்தில் டிராக்டர் கொண்டு உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்பொழுது சாப்பிடுவதற்காக டிராக்டரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது டிராக்டரில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அப்பொழுது லாவகமாக மலைப்பாம்பின் கழுத்தை பிடித்து பாம்பை பிடித்துக்கொண்டார். இச்சம்பவம் குறித்து மொரப்பூர் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மொரப்பூர் வனவர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி நாகேந்திரனிடம் இருந்த மலைப்பாம்பை மீட்டு மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர். விவசாயின் டிராக்டரில் மலைப்பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Updated On: 8 Sep 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!