/* */

அரூர் அருகே குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து அரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

HIGHLIGHTS

அரூர் அருகே குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
X

அரூர் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

தர்மபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சேலம் மாவட்டம் அயோதியபட்டினம் முதல் வாணியம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் சுமார் 10 அடி தூரத்திற்கு பீச்சி அடித்தது வெளியேறியது.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறிவருவதாக பொதுமக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் களுக்கு புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அலுவலர்கள் தண்ணீர் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 3 மணி நேரம் தண்ணீர் வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல தண்ணீர் ஓடியது.

குழாய் உடைப்பின் காரணமாக தொட்டம்பட்டி, நாச்சினம்பட்டி, சின்னகுப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கோபாலபுரம் ஜம்மனஹள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது. அதிகாரிகள் உடைந்த குழாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சீர் செய்யும் பணி இன்று அல்லது நாளை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 25 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!