/* */

தர்மபுரி அருக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் டாக்டர், வக்கீல், ஆசிரியர் சிக்கினர்

தர்மபுரி அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக டாக்டர், அரசு வக்கீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தர்மபுரி அருக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் டாக்டர், வக்கீல், ஆசிரியர் சிக்கினர்
X

தருமபுரி மாவட்டம், அரூர் திருவிக நகரை சேர்ந்தவர் குமார். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து பறக்கும் படையினர் திருவிக நகரில் உள்ள குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் வீட்டில் ரூ.16.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, தருமபுரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி, பல் மருத்துவர் சரவணன், ஆசிரியர் குமார், நேதாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மற்றும் பல் மருத்துவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். தற்போது, அரசுப்பள்ளி ஆசிரியர் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 3 April 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  5. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்