/* */

அரூர் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு; வனத்துறையினர் கவலை

அரூர் அருகே காப்பு காட்டில் நாய் கடித்ததில் படுகாயமடைந்த 5 வயது மதிக்கதக்க பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

HIGHLIGHTS

அரூர் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு; வனத்துறையினர் கவலை
X

அரூரில் நாய் கடித்ததில் உயிரிழந்த மான்.

தருமபுரி மாவட்டம், அரூர் மொரப்பூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட காப்பு காடுகள் உள்ளன. இங்கு மான், மயில், காட்டெருமை, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து அப்பகுதிகளில் குட்டைகள் அமைக்கப்பட்டு, சோலார் மூலம் தண்ணீர் நிரப்பியும், மழை நீரும் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியே வருகின்றன.

அதேபோல் வனப் பகுதியின் நடுவில் பிரதான சாலை இருப்பதால், வன விலங்குகள் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வன சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 5 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் உயிரிழந்தது. தொடர்ந்து சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமானை பார்த்தவர்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொரப்பூர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர், புள்ளிமானை மீட்டு, கால்நடை மருத்துவரால் உடலை பிரேத பரிசோதனை செய்து, வனப் பகுதியிலேயே புள்ளிமானை அடக்கம் செய்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் வன விலங்குகளை காப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், வன விலங்குகள் உயிரிழப்பு தொடர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...