/* */

அரூர் அருகே அண்ணன் மகனை கொடூரக் கொலை செய்த சித்தப்பாக்கள் கைது

அரூர் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன் மகனை சித்தப்பாகள் இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அரூர் அருகே அண்ணன் மகனை கொடூரக் கொலை செய்த சித்தப்பாக்கள் கைது
X

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், ஜெயாவின் மூத்த மகன் செல்லக்கண்ணு, (37) என்பவர் குடிபழக்கத்திற்க்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார்.

கடந்த 23 வருடங்களுக்கு முன் இவரது தந்தை சண்முகம் இறந்து விட்டார். கடந்த மூன்று வருடங்களாக இவருக்கும் இவரது சித்தப்பா முருகேசன், சிவகுமார் உடன் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. ஒன்றை லட்சம் பணம் சித்தப்பாவிடம் செல்லக்கண்ணு கொடுத்ததாகவும் அந்த பணத்தை அடிக்கடி குடிபோதையில் திருப்பி கேட்டுக்கும்போது அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு செல்லக்கண்ணு இவருடைய சித்தப்பாக்கள் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பகை மேலும் முற்றிக்கொண்டது. செல்லக்கண்ணு குடித்துவிட்டால் தாய் என்று பார்காமல் கூட அடிப்பதாக சொல்லப்படுகிறது.இதனால் இவருடைய சித்தப்பாக்கள் இருவரும் செல்லக்கண்ணுவின் விரல்களை அடித்து நொறுக்கி உள்ளதாக கூறுகின்றனர்.

செல்லக்கண்ணு குடித்துவிட்டால் சொத்தை பிரித்து கொடு என்று தன்னுடைய சித்தப்பாவிடம் சண்டையிடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. பிரச்சனை தொடர்ந்து இதே போல் நீடித்து கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அசிங்கமான வார்த்தைகளால் திட்டிவிட்டு வீட்டின் மேலே உள்ள அறையில் பூட்டிக் கொண்டு மது அருந்தி இருக்கிறார்.

சற்று பொறுமையை இழந்த முருகேசன், சிவகுமார் இருவரும் ஒன்று சேர்ந்து இனியும் விட்டு வைத்தால் நல்லது இல்லை என்று நினைத்து பெரிய இரும்பு ராடை கொண்டு செல்லக்கண்ணு இருந்த கதவை உடைத்து உள்ளே இருந்த செல்லக்கண்ணுவை மிகவும் கொடூரமான முறையில் இரும்புராடால் சாகும் வரை அடித்ததில் ரத்தவெள்ளத்தில் வீட்டிற்குள்ளே செல்லக்கண்ணு இறந்திருக்கிறார்.

நீண்ட நேரமாக அதிக அளவில் சத்தம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் முருகேசன், சிவகுமார் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அரூர் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 21 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு