/* */

அரூரில் நீதித்துறை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்: நீதிபதி துவக்கி வைப்பு

அரூரில் நீதித்துறை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரூரில் நீதித்துறை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்: நீதிபதி துவக்கி வைப்பு
X

அரூரில் நீதித்துறை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடக்கி வைத்த சார்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா, நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவினையொட்டி, நீதித்துறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரூரில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதையடுத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் வழங்கினார்.

தொடர்ந்து அரூர் நகர், பொய்யப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசார வாகனத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இதில், அரசு வழக்குரைஞர்கள் கே.ஜி.சரவணன், சி.எம்.சேகர், பி.வி.பொதிகைவேந்தன், எஸ்.பெருமாள், நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!