Begin typing your search above and press return to search.
அரூரில் நீதித்துறை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்: நீதிபதி துவக்கி வைப்பு
அரூரில் நீதித்துறை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா, நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவினையொட்டி, நீதித்துறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரூரில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் வழங்கினார்.
தொடர்ந்து அரூர் நகர், பொய்யப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசார வாகனத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இதில், அரசு வழக்குரைஞர்கள் கே.ஜி.சரவணன், சி.எம்.சேகர், பி.வி.பொதிகைவேந்தன், எஸ்.பெருமாள், நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.