ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் மற்றும் தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள வர்ணீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழாசமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோயில்களில் நேற்று மாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடும் நடைபெற்றது. பின்னர் அன்ன அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரியில் புகழ்பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழா இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் வரமஹாலக்ஷ்மி உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோயில், குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவில், கீழ் தெரு ஹரிஹர நாதசுவாமி கோயில் மற்றும் அன்னசாகரம், மதிகோன்பாளையம், பாரதிபுரம் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

தருமபுரி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய வர்ணீஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி மங்களாம்பிகை உடனாகிய ஆதி லிங்கேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையிலுள்ள அருணேஸ்வரர் கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களான பென்னாகரம், அரூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள சிவன் கோயில்களில் நேற்று அன்னாபிஷேக விழா நடைபெற்றது.


Tags

Next Story