முதல்வரை அவதூறாக பேசிய அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

முதல்வரை அவதூறாக பேசிய அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வே.சௌந்தரராசு டிஎஸ்பியிடம் புகார் அளித்தார்.

முதல்வரை அவதூறாக பேசியதாக அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி அரூர் டிஎஸ்பியிடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் புகாரளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வே.சௌந்தரராசு டிஎஸ்பியிடம் புகார் அளித்தார்.

அவர் தனது புகார் மனுவில், தர்மபுரியில் கடந்த 17 ஆம் தேதி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாபிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பேசும் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவரின் தாயாரையும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி தகாத வார்த்தையால் ஒருமையில் பேசி உள்ளார்.

இச்செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. முதலமைச்சரை அவமதிக்கும் வகையிலும் அவதூறாக பேசிய பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மீது உரிய விசாரணை செய்தும் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வே.சௌந்தரராசு தனதுமனுவில் கூறியுள்ளார்.

உடன் அரசு வழக்கறிஞர் பி.வி.பொதிகைவேந்தன், முக முகமதுஅலி, ஓவியர் குப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் இராணி, அம்பேத்கர், ஜார்ஜ், சூர்யா, வெங்கடேசன், சர்தார், பாஷா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story