தர்மபுரியில் வரும் 24ம் தேதி தீயணைப்பு தண்ணீர் லாரி ஏலம்

தர்மபுரியில் வரும் 24ம் தேதி தீயணைப்பு தண்ணீர் லாரி ஏலம்

பைல் படம்.

தர்மபுரியில் வரும் 24ம் தேதி தீயணைப்பு தண்ணீர் லாரி ஏலம் விடப்படுவதாக மாவட்ட தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது.

தருமபுரி தியணைப்பு-மீட்புப்பணி நிலையத்தில் அரசு தண்ணீர் லாரி த.நா-29 அ-0117 (அசோக்லைலேண்ட்) கழிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை 24-03-2022 அன்று முற்பகல் 11:30 மணியளவில் தருமபுரி தீயணைப்பு-மீட்புப்பணி நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

ஆரம்ப ஏல விலையாக ரூ.1,40,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விலைப்புள்ளியை கோரலாம் என மாவட்ட தீயணைப்பு-மீட்புப்பணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story