/* */

தர்மபுரி ரயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் போன்றவற்றை தென்மேற்கு கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தர்மபுரி ரயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
X

 பெங்களுரு தென் மேற்கு ரயில்வே கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் 

பெங்களுருவை தலைமையிடமாகக் கொண்ட தென் மேற்கு ரயில்வே துறை சார்பில் தர்மபுரி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து பெங்களுரு தென் மேற்கு ரயில்வே கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மேற்கண்ட ரயில் நிலையங்களில் உள்ள நடை மேடைகள், பயணிகள் அறை, டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அப்போது ரயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

குறிப்பாக தர்மபுரி ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலாளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது ரயில்வே துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 12 Aug 2023 7:02 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை